பாலக்கோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைநகர் தில்லியில் பாஜக எம்.பி. க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்க்படும் நிலையில், பாஜக எம்.பி. க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் குறித்த அணுகுமுறைகள், தேர்தலுக்கான பிரச்சார உத்தி, வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து மோடி அறிவுரை வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல், நமது விமானப்படை வீரர்ரகள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.