புது தில்லி: புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளுக்கு 102 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
மேலும், ஆன்மிகவாதியான பங்காரு அடிகளார் மற்றும் திரைப்பட நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவும் பத்ம ஸ்ரீ விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இன்று குடியரசுத் தலைவர் கையால் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.