அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கூடாது: தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு

அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கூடாது: தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு

அமைச்சர்கள் அரசு பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

அமைச்சர்கள் அரசு பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

தலைமை ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை தேர்தல் பணிகளுக்காக பயன்டுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க கூடாது.

அமைச்சர்கள் தங்கள் அலுவலக ரீதியிலான பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. 

அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் தங்களது தேர்தல் பணிக்காக பயன்படுத்தக் கூடாது.

தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்தும் திடல்கள் போன்ற பொது இடங்கள், ஹெலிபேடு தளம் போன்றவைகளை ஆளும் கட்சியினர் மட்டும் பயன்படுத்த கூடாது, மற்ற கட்சியினரும் வேட்பாளர்களும் கேட்கும் போது அவர்களுக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லங்கள், மற்றும் பிற தங்கும் இடங்களை ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்தாமல், பிற கட்சிகளும், வேட்பாளர்களும், முறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு கட்சியும், வேட்பாளரும் அவற்றை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த அனுமதிக்கப்படாது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வடிவத்திலும் நிதியோ, வாக்குறுதிகளையோ வழங்க கூடாது.

எந்தவொரு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டக் கூடாது.

சாலை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த வாக்குறுதிகளை அளிக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com