ஒவ்வொரு தேர்தலும் சோனியா காந்தி குடும்பத்துக்கு சுற்றுலா போன்றது: உ.பி. துணை முதல்வர்

சோனியா காந்தி குடும்பத்துக்கு ஒவ்வொரு தேர்தலும் சுற்றுலா செல்வதை போன்றது என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா
ஒவ்வொரு தேர்தலும் சோனியா காந்தி குடும்பத்துக்கு சுற்றுலா போன்றது: உ.பி. துணை முதல்வர்

சோனியா காந்தி குடும்பத்துக்கு ஒவ்வொரு தேர்தலும் சுற்றுலா செல்வதை போன்றது என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலுக்கான 3 நாள் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார். இந்த பிரசாரப் பயணத்தின்போது அலாகாபாத் முதல், பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசி வரை சுமார் 100 கி.மீ தொலைவுக்கு கங்கை நதியில் படகில் பயணித்து, கரையோர மக்களிடம் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 
இதைக் குறிப்பிட்டு, லக்னெளவில் செய்தியாளர்களிடம் தினேஷ் சர்மா திங்கள்கிழமை கூறியதாவது:
சோனியா காந்தி குடும்பத்துக்கு ஒவ்வொரு தேர்தலும், சுற்றுலாவுக்கு செல்வதைப் போன்றது. ஒவ்வொரு தேர்தலின்போதும், அவர்கள் இங்கு வந்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு சென்று விடுவார்கள். தேர்தல் முடிந்த பின்னர், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவார்கள். 
ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிவிக்கப்படும்போது, சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியில் மிகப்பெரிய தலைவர் பொறுப்பு அளிக்கப்படும். முந்தைய தேர்தல்களிலும், பிரியங்கா காந்தி காங்கிரஸுக்காக பிரசாரம் செய்துள்ளார். எனினும் அந்த தேர்தல்கள் அனைத்திலும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்தது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com