மக்கள் குரலை புறக்கணித்தவர்கள் மோடி, மம்தா: மேற்கு வங்கத்தில் ராகுல் தாக்கு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஊழல்வாதிகளின் பாதுகாவலர் என்று குற்றம்சாட்டினார். 
மக்கள் குரலை புறக்கணித்தவர்கள் மோடி, மம்தா: மேற்கு வங்கத்தில் ராகுல் தாக்கு


மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஊழல்வாதிகளின் பாதுகாவலர் என்று குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிகாரை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்திலும் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"பிரதமர் மோடி தினமும் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார். அவர் எங்கு போனாலும் பொய் சொல்கிறார். வர இருக்கும் மக்களவைத் தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி. ஒருபுறம் காங்கிரஸ் உள்ளது. அது நாடு ஒற்றுமையாக இருக்க போராடுகிறது. மறுபுறம் பாஜக-ஆர்எஸ்எஸ் உள்ளது. அவர்கள் நாட்டை மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிக்க பார்கிறது. 

பிரதமர் மோடி ஊழல்வாதிகளின் பாதுகாவலர். நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் விஜய் மல்லையா என இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர்களுக்கு பாதுகாவலர். ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு பரிசாக வழங்கி, ரூ. 30,000 கோடி மக்கள் பணத்தை திருடிவிட்டார். 

மத்தியில் ஆளும் தலைவரும் (பிரதமர் மோடி), மாநிலத்தில் ஆளும் தலைவரும் (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி) யாருடனும் ஆலோசனை கேட்காமல் ஆட்சி செய்கின்றனர். இரண்டு பேரும் மக்களின் குரலை புறக்கணிக்கின்றனர். 

மேற்கு வங்கம் ஆட்சி இன்று ஒரே ஒரு நபரால் நடத்தப்படுகிறது. அவர் (மம்தா பானர்ஜி) யாருடனும் ஆலோசனை கேட்க மாட்டார். மேற்கு வங்கத்துக்கு குரல் இல்லையா? காங்கிரஸ் நிர்வாகிகள் இங்கு தாக்கப்படுகிறார்கள். நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டாம். மத்தியில் நாங்கள் ஆட்சி அமைக்கவுள்ளோம். அதன்பிறகு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இங்கு (மால்டா மாவட்டம்) நீங்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களித்துள்ளீர்கள். இந்த முறை ஒரு நபர் உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். இதை நினைவு கொள்ளுங்கள். முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதை மறந்துவிடாதீர்கள். 

அச்சத்தில் அழுத்தம் காரணமாக அவர் உங்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். மேற்கு வங்கத்தில், ஒருவர் துரோகம் இழைத்துவிட்டு வேலை பார்க்க முடியாது என்பதை அவருக்கு நினைவு படுத்துங்கள்" என்றார். 

வடக்கு மால்டா தொகுதியின் தற்போதைய எம்பியாக இருக்கும் மௌசம் பெனாசீர் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணமூல் கட்சியில் இணைந்தார். இவரையே ராகுல் காந்தி துரோகியாக குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com