ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த துப்பாக்கிச்சடு இன்றும் தொடர்ந்து வருகிறது. இதில் இந்திய ராணுவத்தின் தரப்பிலும் பதிலடி தரப்பட்டு வருகிறது.
ஆனால், பாக். ராணுவ இழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை. மேலும் கடந்த 4 நாட்களில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.