இந்திய விமானப்படையில் புதிய ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிக எடை சுமக்கக்கூடிய சினூக் வகை ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனௌ அறிமுகம் செய்து வைத்தார்.
ஒப்பந்தத்தின்படி மொத்தமுள்ள 15 ஹெலிகாப்டர்களில் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு முதல் பகுதியாக 4 ஹெலிகாப்டர்கள் வந்தடைந்தன.
அதிக எடைகளை சுமக்கக்கூடிய வகையிலான இவ்வகை ஹெலிகாப்டர்கள் 19 நாடுகளின் விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகை ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மற்றும் பொருட்கள் என அனைத்தையும் கொண்டு செல்ல இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.