ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் ஆண்டு வருமானம் உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
இந்தியாவில் 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு ரூ.72 ஆயிரம் ஆண்டு வருமானம் உறுதி செய்யப்படும். இதனால் 5 கோடி குடும்பங்களும், 25 கோடி மக்களும் பயன்பெறுவார்கள். இந்தியாவில் இருந்து வறுமை ஒழிக்கப்படும்.
இந்த திட்டம் பலதரப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும். இதற்காக பல நிதி ஆலோசகர்களிடமிருந்தும் யோசனைகள் பெறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகினர். அவர்கள் அனைவருக்கும் தகுந்த நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.