விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுஷேன் குப்தாவை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ராஜிவ் சக்ஸேனா அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் அளித்த தகவலின்படி இந்த வழக்கில் சுஷேன் மோகன் குப்தா நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று (செவ்வாய்கிழமை) தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதையடுத்து, 4 நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.