பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்கட்சிகள் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்கட்சிகள் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளன. அப்போது ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அனைத்து எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ஆளும் பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com