ராகுல் சொன்னால் சரிதான்: ஆம்ஆத்மி கூட்டணிக்கு ஷீலா தீட்சித் சரண்?

ஆம்ஆத்மி உடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவு இறுதியானது என்று தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
ராகுல் சொன்னால் சரிதான்: ஆம்ஆத்மி கூட்டணிக்கு ஷீலா தீட்சித் சரண்?

ஆம்ஆத்மி உடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவு இறுதியானது என்று தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

தில்லியில் ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அதனை முறைப்படி ஊடகங்களிடம் தெரிவிப்போம். இதுதொடர்பான இறுதிமுடிவை ராகுல் அறிவிப்பார். ஏனென்றால் அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர். எனவே ராகுல் எந்த முடிவெடுத்தாலும் அதன்படி நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், ஆம்ஆத்மி கூட்டணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுல் மற்றும் ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனித்தனியாக சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்து வரவுள்ள தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆம்ஆத்மி உடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உறுதிபடுத்த வேண்டும். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மூத்த தலைவர் சோனியா ஆகியோருக்கு ஷீலா தீட்சித் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com