காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கெல்லர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள்
காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கெல்லர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சிஆர்பிஎஃப் வீரர்களும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் சேர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து தக்க பதிலடி கொடுத்து வந்த பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். 

மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com