பியோரா: இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்துவிட்டால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது தாய் சோனியாவுக்குக் கூட தெரியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமித் ஷா, 2014ம் ஆண்டு அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் என்றார்.
ஓய்வெடுக்காமல் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் மோடி, மற்றொரு பக்கம் ராகுலோ ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார், அவர் எங்கு செல்கிறார் என்பது தாய் சோனியாவுக்குக் கூட தெரியாது என்று பேசினார். என் மகன் எங்கிருக்கிறார் என்று அவ்வப்போது சோனியா கேட்டுக் கொண்டே இருப்பார்.
எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இந்தியா வெடிகுண்டுகளால் பதிலடி கொடுக்கும் என்றும் அமித் ஷா பேசினார்.