ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் செல்லப்பல்லி கிராமத்தில் சிலிண்டர் வெடித்து சனிக்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியிலுள்ள 15 வீடுகள் எரிந்து நாசமானது.
சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீ விபத்தை கட்டுப்படுத்தினர். தீ விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.