ஃபானி புயலை வைத்தும் மோசமான அரசியல் செய்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, ஃபானி புயல் பாதித்த ஒடிஸாவை பார்வையிட்டு திரும்பியிருக்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் தொலைபேசியில் பேச விரும்பினேன். அதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் மமதை பிடித்த மம்தா பானர்ஜி பேசவில்லை. அவர் மீண்டும் எனக்கு போன் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் போன் செய்யவேயில்லை என்று மோடி கூறினார்.
மேலும், வேகத்தடையான மம்தா பானர்ஜி, மாநில மக்களின் நலனைக் காட்டிலும் அரசியல் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார் என்று பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.