மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.2160 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், மாநிலத்தில் 151 தாலுக்கா கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்த மாநில அரசு, மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்ணாவிஸ் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2160 கோடியை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவிற்கு மட்டும் ரூ.4248.59 கோடியை வறட்சி நிவாரண நிதியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இதனிடையே மாநிலத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளது.