காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதற்காக, அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகையில்,
"பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதற்காக, அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும்" என்றார்.
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்தே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆளும் பாஜக தெரிவித்தது.