உங்கள் அறை கூட எனக்கு ஆசிர்வாதம் தான் என்று முன்னணி அரசியல் தலைவரின் சாடலுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது:
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, என்னை அறைய காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் இதுவரை அவரை மரியாதையுடன் தான் அழைத்து வருகிறேன். எனவே அவர் அறைந்தாலும் அது எனக்கு ஆசிர்வாதம் தான். எனவே அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.
அதேபோன்று நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களையும் அதேபோன்று மம்தாவால் தைரியமாக அறைய முடியுமா? என்று மட்டும் கூறுங்கள் அதுபோதும். அதுமட்டுமல்லாமல் ஊடுருவல்காரர்களை மம்தா தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு வருகிறார். அவர்கள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனறு தெரிவித்தார்.