பிரபல தொலைக்காட்சி நடிகர் அருண் பக்ஷி, பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார்.
தில்லியில் பாஜக மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ரமண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் அருண் பக்ஷி இணைந்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாஜக சித்தாந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கிறேன். மோடியை போன்று தற்போது நாட்டில் சிறந்த தலைவர்கள் யாரும் கிடையாது. அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பிறகு, அதுபோன்ற தலைவரை நாடு தற்போதுதான் பார்க்கிறது' என்றார்.
சுமார் 200 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதுடன், பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
மகாபாரதம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். மகாபாரத தொடரில் திரௌபதி, சிகண்டி ஆகியோரின் சகோதரன் திருஷ்டத்யும்னன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.