அன்னையர் தினத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு அன்னையானார் இரோம் ஷர்மிளா

மணிப்பூரின் இரும்பு மனுஷி என்று அறியப்படும் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா, அன்னையர் தினத்தன்று இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையாகியுள்ளார்.
அன்னையர் தினத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு அன்னையானார் இரோம் ஷர்மிளா


பெங்களூரு: மணிப்பூரின் இரும்பு மனுஷி என்று அறியப்படும் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா, அன்னையர் தினத்தன்று இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையாகியுள்ளார்.

46 வயதாகும் இரோம் ஷர்மிளா, 2017ம் ஆண்டு டெஸ்மாண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொடைக்கானலில் வாழ்ந்து வந்தார்.

35 வார கர்ப்பிணியாக இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு, மல்லேஷ்வரத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. மே மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.21 மணிக்கு, உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையானார் இரும்பு மனுஷி. குழந்தைகளுக்கு அவரது தந்தை நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

இது எனக்கு புதிய வாழ்க்கை. எனது புதிய வாழ்க்கை இங்கிருந்து தொடங்குகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எங்களது குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்றுதான் விரும்பினோம். அப்படியே நடந்துள்ளது என்று இரோம் ஷர்மிளா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com