நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன.
இதுகுறித்த தகவலின்பேரில் நிலச்சரிவினால் சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் வரையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏற்கெனவே நிலச்சரிவின் காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மூடப்பட்டது. பின்னர் அந்த சாலையில் சிக்கியிருந்த வாகனங்கள் மட்டும் வெளியேற வசதியாக, ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com