கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள், மோடியின் 5 ஆண்டு கால ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரதமர் மோடி பேசியதாக தெரிவிக்கையில், "நான் பல்வேறு தேர்தல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த தேர்தலில் மேற்கொண்ட பிரசாரங்கள், எனக்கு பிரசாரம் போல் தெரியவில்லை. இது புனித யாத்திரை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சியை வெற்றிகரமான சோதனை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்" என்றார்.