பெங்களூரு: இந்திய அளவில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உள்ளது.
ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக அந்த அளவுக்கு சோபிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி கூட்டணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து கர்நாடக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறுகையில், வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது. மோடியை அவதூறாகப் பேசியவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.