ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
புல்வாமா மாவட்டத்தின் தாத்ஸர் த்ரல் பகுதியில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதி சாகிர் முஸா பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் கஸ்வாத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தளபதி சாகிர் முஸா சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் அங்கிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாகி மற்றும் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.