இந்தியா
ஷஷி தரூர் ஏதோ சொல்கிறார்.. கொஞ்சம் கேளுங்களேன் ப்ளீஸ்!
காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பதவியை கட்சித் தலைமை எனக்கு வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஷஷி தரூர் கூறியுள்ளார்.
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பதவியை கட்சித் தலைமை எனக்கு வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஷஷி தரூர் கூறியுள்ளார்.
மக்களவைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை எனக்கு வழங்கினால், அதனை ஏற்க நான் தயார் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஷஷி தரூர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வியூகமான நியாய் மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளும் ஷஷி தரூர், ராகுல் தொடர்ந்து கட்சித் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் எம்.பி.யாகியுள்ளார் ஷஷி தரூர்.