மேற்குவங்கத்தில் மேலும் ஒரு பாஜக தொண்டர் கொலை

மேற்குவங்கத்தில் மேலும் ஒரு பாஜக தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்கு பர்த்வான் மாவட்டம், பாண்டுக் கிராமத்தை சேர்ந்தவர்

மேற்குவங்கத்தில் மேலும் ஒரு பாஜக தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு பர்த்வான் மாவட்டம், பாண்டுக் கிராமத்தை சேர்ந்தவர் சுஷில் மொந்தால். பாஜக தொண்டரான அவருக்கும், திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுஷில் மொந்தால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பாஜக கொடியை வீட்டின் முன்பு மொந்தால் வைத்ததாகவும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, அவரை திரிணமூல் காங்கிரஸார் 3 பேர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில் போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், இந்த கொலைக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்று அக்கட்சியின் எம்எல்ஏ ஷேக் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். பாஜகவில் நேரிட்ட உள்கட்சி மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நேரிட்ட அரசியல் மோதலில் பாஜக தொண்டர்கள் 40க்கும் மேற்பட்டோர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவியேற்கும் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com