அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்து: 14 மாணவர்கள் காயம்

அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் காயமடைந்தனர். 
அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்து: 14 மாணவர்கள் காயம்

அஸ்ஸாமில் இரண்டு பள்ளி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் காயமடைந்தனர். 

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தில் உள்ள லோக்ரா பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுடன் பள்ளி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது நபர் ஒருவர் குறுக்கே வரவே அவர் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். 

இந்நிலையில் அந்தப் பேருந்தை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த மற்றொரு பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com