ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கடந்த காலங்களைப் போல் இந்த முறை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள்.
மாநில அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலா் பி.வி.ஆா்.சுப்பிரமணியன் தலைமையில் ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீரின் மக்கள்தொகை 1.24 கோடியாக இருந்தது என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது.