கர்நாடக பிரீமியர் லீக் போட்டியில் சூதாட்டம்: சர்வதேச சூதாட்ட தரகர் கைது

கர்நாடக பிரீமியர் லீக் போட்டியில் சூதாட்டம்: சர்வதேச சூதாட்ட தரகர் கைதுபெங்களூரு கர்நாடக பிரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில்
கர்நாடக பிரீமியர் லீக் போட்டி சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச சூதாட்ட தரகர் சயாம்.
கர்நாடக பிரீமியர் லீக் போட்டி சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச சூதாட்ட தரகர் சயாம்.


பெங்களூரு கர்நாடக பிரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சர்வதேச சூதாட்ட தரகர் சயாம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேபிஎல் என அழைக்கப்படும் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டிகள் கர்நாடகாவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்றதோடு, ஹவாலா முறையில் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. சூதாட்டமானது சர்வதேச அளவில் நடந்துள்ளதாகவும், துபாயில் உள்ள தரகர்களுக்கு ஹவாலா முறையில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதனிடையே, சூதாட்டம் தொடர்பாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அஷ்பாக் தாராவை போலீஸார் கைது செய்தனர். 

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சூதாட்ட தரகரான பாவேஷ் பக்னா என்பவரை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சயாம் என்ற சூதாட்ட தரகரை போலீஸார் தேடிவந்தனர். 

இந்நிலையில், ஹரியானாவில் வசித்து வரும் சர்வதேச சூதாட்ட தரகரான சயாம் மீது போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, தொடர்ந்து தேடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சயாம் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com