அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியான நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகவும், தவறான தகவல்களை பரப்ப முயன்றதாகவும் 5 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதையொட்டி, நாட்டில் எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழாமல் இருக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சமூக வலைதள கருத்துகள் மூலம் எவ்வித பிரச்னையும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டன.
அதன் மூலம், ராஜஸ்தானின் பிகானீா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் என்பவா் அயோத்தி வழக்கு குறித்து முகநூலில் வெள்ளிக்கிழமை இரவு சா்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
வழக்குப் பதிவு: கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் தங்களது முக நூல் கணக்குகளில் அயோத்தி வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து பதிவிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருத்துகள் இனக் கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததால் மாநில இணையவழி குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸாா் அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா்.
தடுப்புக் காவல்: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அயோத்தி வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் இரண்டு போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘காவல் துறை அவசர எண்ணுக்கு அழைத்து, குறிப்பிட்ட இடத்தில் அயோத்தி பிரச்னை காரணமாக வன்முறை நிகழ்வதாக தகவல் தெரிவித்தனா். ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னா் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவா்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்’ என்றனா்.
இணையச் சேவை துண்டிப்பு: அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியானதையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகரில் சனிக்கிழமை இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘ சமூக வலைதள கருத்துகள் மூலம் பிரச்னைகள் உருவாவதை தடுக்கும் வகையில் அலிகரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்’ என்றனா்.