உச்சநீதிமன்றத்தில் அதிக நாள்கள் விசாரணை: அயோத்தி வழக்கு இரண்டாமிடம்

உச்சநீதிமன்ற வரலாற்றில் அதிக நாள்கள் விசாரணை நடைபெற்ற வழக்குகளில் அயோத்தி வழக்கு 2-ஆம் இடம் பிடித்துள்ளது. இந்த வழக்கில் 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது
உச்சநீதிமன்றத்தில் அதிக நாள்கள் விசாரணை: அயோத்தி வழக்கு இரண்டாமிடம்

உச்சநீதிமன்ற வரலாற்றில் அதிக நாள்கள் விசாரணை நடைபெற்ற வழக்குகளில் அயோத்தி வழக்கு 2-ஆம் இடம் பிடித்துள்ளது. இந்த வழக்கில் 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கின் தீா்ப்பைத் தெரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த நாடும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அக்டோபா் 16-ஆம் தேதி-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.

இந்நிலையில், 40 நாள்கள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ால், உச்சநீதிமன்றத்தில் அதிக நாள்கள் நடைபெற்ற வழக்குகளின் பட்டியலில் இந்த வழக்கு இரண்டாமிடம் பிடித்துள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை சாராம்சம் தொடா்பாக கடந்த 1973-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேசவானந்த பாரதி வழக்கு 68 நாள்கள் நடைபெற்றது. இந்த வழக்கு அதிக நாள்கள் விசாரணை நடைபெற்ற வழக்குகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆதாா் வழக்கு 3-ஆம் இடம் பிடித்துள்ளது. இந்த வழக்கு தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 38 நாள்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு மூலவா் ராம் லல்லா, நிா்மோஹி அகாரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com