பனாஜி: பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.
1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நந்தா, கடந்த மார்ச் மாதம் கோவாவின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் நந்தாவின் மரணத்துக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.