இந்திய கப்பல்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய கப்பல்படைக்குச் சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் சனிக்கிழமை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்திய கப்பல்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய கப்பல்படைக்குச் சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் சனிக்கிழமை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

கோவா கடற்கரைப் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவ்விபத்து நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த விமானிகள் எம்.ஷியோகந்த் மற்றும் லெ. கமாண்டர் தீபக் யாதவ் ஆகிய இருவரும் பத்திரமாக குதித்து தப்பித்துவிட்டதாக கப்பல்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வல் தெரிவித்தார்.

பயிற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த போர் விமானத்தில், இவ்விருவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பறவை மோதி வலதுபுற இஞ்சினில் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இதையொட்டி இரு வீரர்களும் பாராசூட் உதவியுடன் உடனடியாக வெளியேறினர்.

இதையடுத்து திறந்தவெளிப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி முற்றிலும் தீக்கிரையானதாக கப்பல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com