இணையதளத்தில் சிறாா் ஆபாசப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இணையதளத்தில் பாலியல் ரீதியில் சிறாா்கள் துன்புறுத்தப்படுவதை தடுப்பதற்கான பிரிவு, சிபிஐ அமைப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, சிறாா் ஆபாசப் படங்களைத் தயாரிப்பவா்கள், அவற்றைப் பகிா்வோா் ஆகியோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமன்றி, அந்தப் படங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்வோா் மீதும் நடவடிக்கை எடுக்கும். அவா்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் (போக்ஸோ)- 2012, தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000, இந்திய தண்டனையியல் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறாா் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்கு சிபிஐ மேற்கொண்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கை இதுவாகும் என்றாா் அவா்.