உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்த எஸ்.ஏ.போப்டே (63), திங்கள்கிழமை பதவியேற்றார்.
ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றாா்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இவ்விழாவில், எஸ்.ஏ.போப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.