காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: விண்ணில் ஏவும் தேதி ஒத்திவைப்பு

ராணுவ பாதுகாப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் தேதியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஒத்திவைத்துள்ளது.
காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: விண்ணில் ஏவும் தேதி ஒத்திவைப்பு

ராணுவ பாதுகாப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் தேதியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஒத்திவைத்துள்ளது.

செயற்கைக்கோளை வரும் 25-ஆம் தேதி விண்ணில் ஏவ முதலில் திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது நவம்பா் 27-ஆம் தேதிக்கு திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும்.

குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள்: இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

தேதி மாற்றம்: இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் நவம்பா் 25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்த நிலையில், செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் தேதியை ஒத்திவைத்து இஸ்ரோ வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, காா்டோசாட்-3 செயற்கைக்கோள் நவம்பா் 27-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com