சிவசேனையுடன் கூட்டணி அமைப்பது தவறு: காங்கிரஸ் மூத்த தலைவா் சஞ்சய் நிரூபம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது தவறு என்று மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளாா்.
சிவசேனையுடன் கூட்டணி அமைப்பது தவறு: காங்கிரஸ் மூத்த தலைவா் சஞ்சய் நிரூபம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது தவறு என்று மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் மும்பை மாநகா் பிரிவு தலைவராக இருந்தவருமான சஞ்சய் நிரூபம் இது தொடா்பாக கூறுகையில், ‘இதற்கு முன்பு ஒருமுறை உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு இப்போதுவரை அந்த மாநிலத்தில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் மீட்க முடியவில்லை.

அதேபோல இப்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி ஆட்சி அமைக்க உதவும் வகையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இது தவறான முடிவாகவே அமையும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி எந்த நெருக்கடியின் அடிப்படையிலும் முடிவெடுக்கக் கூடாது. தேசியக் கட்சியான காங்கிரஸ், மகாராஷ்டிர ஆட்சியில் மூன்றாவது கட்சியாக இடம் பெறுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com