செவ்வாய்: காலை 10 : 39 மணி - மகாராஷ்டிர சட்டப் பேரவையில் புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க ஃபட்னவீஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
காலை 10 : 42 மணி - தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டதை உறுதிப்படுத்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிற்பகல் 1 : 18 மணி - ஃபட்னவீஸ் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதால், பாஜக எம்எல்ஏக்கள் உடனே மும்பைக்கு வருமாறு அழைப்பு
பிற்பகல் 02 : 17 மணி - மகாராஷ்டிர பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால், இடைக்கால பேரவைத் தலைவரை நியமிக்குமாறு ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை
பிற்பகல் 03 : 01 மணி - நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜெ.பி.நட்டா அவசர ஆலோசனை
பிற்பகல் 03 : 42 மணி - துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜிநாமா செய்துவிட்டதாக தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவிப்பு
பிற்பகல் 03 : 44 மணி - முதல்வர் பதவியை ராஜிமாநா செய்யப்போவதாக ஃபட்னவீஸ் அறிவிப்பு
மாலை 04 : 34 மணி - ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் ராஜிநாமா கடிதம் அளித்தார் ஃபட்னவீஸ்
மாலை 05 : 06 மணி - இடைக்கால பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்பகர் நியமனம்
மாலை 05 : 50 மணி - சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார்- என்சிபி தலைவர் நவாப் மாலிக் அறிவிப்பு
மாலை 05 : 52 மணி - புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக சட்டப்பேரவை புதன்கிழமை கூடும் என்று ஆளுநர் அறிவிப்பு
இரவு 07 : 32 மணி - மும்பை நட்சத்திர விடுதியில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
இரவு 08 : 11 மணி - மகாராஷ்டிர விகாஸ் முன்னணியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு
இரவு 09 : 39 மணி - ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உத்தவ் தாக்கரே கடிதம்
இரவு 09 : 39 மணி - என்சிபி தலைவர் சரத் பவாரின் வீட்டுக்கு வந்தார் அஜித் பவார்
இரவு 10 : 59 மணி - மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் வியாழக்கிழமை (நவ.28) பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு.