தெலங்கானாவில் கொடூரம்..! பிறந்தநாளன்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி

தெலங்கானாவில் 19 வயது சிறுமி தனது பிறந்தநாளன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தெலங்கானாவில் கொடூரம்..! பிறந்தநாளன்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி

தெலங்கானாவில் 19 வயது சிறுமி பிறந்தநாளன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா நகரைச் சேர்ந்த 19 வயது சிறுமி புதன்கிழமை காலை தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். பல மணி நேரம் ஆகியும், திரும்பாத நிலையில், பெற்றோர்கள் மகளைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதன்பின்னர் கோவிலில் சென்று பார்த்தபோது மகள் அங்கு இல்லை. இதுகுறித்து அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். காவல்துறை விசாரணையில், அன்று இரவு சிறுமியின் உடல் அந்நகரில் உள்ள ஹண்டர் சாலையில் நள்ளிரவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com