50-ஆவது சர்வதேச திரைப்பட விழா குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முக்கிய தகவல்

50-ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
50-ஆவது சர்வதேச திரைப்பட விழா குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முக்கிய தகவல்

உலக சினிமா ரசிகர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் திரைப்பட விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் சென்னை, திருவனந்தபுரம் மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்கள் மிகவும் பிரபலம்.

இந்நிலையில், அனைத்து திரைப்பட விழாக்களிலும் முக்கியமானதாக கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இதில் திரை ஆர்வலர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல திரைப்பட வல்லுநர்களும் கலந்துகொள்வார்கள்.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், 

50-ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த 26 திரைப்படங்கள் திரையிடப்படும். 

அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com