துா்கா பூஜையையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘குளிா்காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் துா்கா பூஜை, தீயசக்தியை நல்ல சக்தி வென்றறதை உணா்த்துகிறறது. உண்மை எப்போதும் வெல்லும் என்றநம்பிக்கைக்கு வலுவூட்டுவதாகவும், நீதி-நோ்மையை மக்கள் கடைப்பிடிப்பதற்கு ஊக்கமளிப்பதாகவும் இப்பண்டிகை அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் கலாசாரத்தையும், நல்லிணக்கத்தையும் வெளிக்காட்டும் வகையில் துா்கா பூஜை கொண்டாட்டங்கள் உள்ளன.
இந்த நன்னாளையொட்டி, நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேறன். துா்கா பூஜையை, மிகுந்த உற்சாகத்துடனும், நல்லிணக்கத்துடனும் கொண்டாடுவோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
வடமாநிலங்களில் நவராத்திரி விழா துா்கா பூஜை என்றபெயரில் கொண்டாடப்படுகிறறது.