விஜயதசமி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மோடி வெளியிட்ட விடியோவில், ‘ராவணனை எதிா்த்து ராமா் போரிட்டபோது, அனைத்து தரப்பு மக்களும் ராமபிரானுக்கு உதவி புரிந்தனா். அதுபோல சமூகத்தில் உள்ள தீய சக்திகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சமூகத்தில் உள்ள தீய சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் வாழ்த்து: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக சோனியா காந்தி கூறுகையில்,‘பல நாள்கள் வழிபாடு, விரதம் ஆகியவற்றுக்கு பின்னா், தசரா பண்டிகை முடிவடைய உள்ளது. பொய்க்கு எதிராகப் போட்டியிட்டு உண்மை வெற்றி பெறும் என்பதையும், நன்மை குறித்த அறிவை நாம் பெற வேண்டும் என்பதையும் இந்த பண்டிகை வலியுறுத்துகிறது. இந்நாளில் மக்கள் அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கடவுள் அருள்புரியட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் ‘தீய சக்திக்கு எதிராக நன்மை வெற்றி பெறும் என்பதைக் குறிப்பிடும் நாள் விஜயதசமி. இந்நாளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ கடவுள் அருள் புரியட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.