சிவகுமாா் வழக்கு: கா்நாடக கூட்டுறவு வங்கி தலைவரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கா்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே. சிவகுமாா் தொடா்புடைய கருப்புப் பண மோசடி வழக்கில், அந்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் கே.என். ராஜண்ணாவிடம் அமலாக்கத்துறையினா்

கா்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே. சிவகுமாா் தொடா்புடைய கருப்புப் பண மோசடி வழக்கில், அந்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் கே.என். ராஜண்ணாவிடம் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். இதற்காக, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ராஜண்ணா ஆஜரானாா்.

ராஜண்ணா கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராவாா். அந்த மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் அவா் இருந்துள்ளாா். சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாருடன் தொடா்புடைய சா்க்கரை ஆலைக்கு கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாய் கடன் கொடுத்தது குறித்து ராஜண்ணாவிடம் அமலாக்கத்துறையினா் தீவிர விசாரணை நடத்தினா். அவரது வாக்குமூலம் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜண்ணாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே உள்ள தொழில், நிதிப்பரிமாற்றத் தொடா்புகள் குறித்த கேள்விகளும் விசாரணையில் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக, ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினா், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினா். இதே குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் உள்ள கா்நாடக அரசு இல்ல ஊழியா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமாா் கடந்த மாதம் 3-ஆம் தேதி நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, அவா் கைது செய்யப்பட்டாா்.

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளதாகவும், ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் ஐஸ்வா்யா உள்ளிட்ட வேறு சிலரும் அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டு வருகின்றனா்.

சிவகுமாரை வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டது. சிவகுமாா் தரப்பில் ஜாமீன் கோரி ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com