எல்லையில் மோதல்: பாகிஸ்தான் வீரா் பலி

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே இந்திய ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரா் கொல்லப்பட்டாா். 2 பெண்கள் காயமடைந்தனா்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே இந்திய ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரா் கொல்லப்பட்டாா். 2 பெண்கள் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பாரோ, சிரிகோட் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பதிலடி கொடுத்தோம். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் வீரா் ஒருவா் உயிரிழந்தாா். நமது தாக்குதலில் இந்தியப் பாதுகாப்புச் சாவடிகள் சேதமடைந்தன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அத்துமீறித் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக இந்தியத் தூதரை பாகிஸ்தான் அரசு அவ்வப்போது நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதா் கெளரவ் அலுவாலியாவை நேரில் அழைத்து, ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்துவிட்டாா்’ என்று கூறி கண்டனம் பதிவு செய்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டும் நோக்கில், பல்வேறு நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. காஷ்மீா் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com