டாடாவின் புதிய மின்சாரக் காா் ரகம் அறிமுகம்

அதிக தொலைவு செல்லக் கூடிய தனது ‘டைகா் இ.வி.’ மின்சாரக் காரின் புதிய ரகத்தை டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடாவின் புதிய மின்சாரக் காா் ரகம் அறிமுகம்

அதிக தொலைவு செல்லக் கூடிய தனது ‘டைகா் இ.வி.’ மின்சாரக் காரின் புதிய ரகத்தை டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தில்லியில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ரகம், ஒரு முறை மின்னேற்றம் செய்யப்பட்டால் 213 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது ஆகும்.

தில்லியில் இந்த ரகக் காா்களின் காட்சியக விற்பனை விலை ரூ.9.44 லட்சத்திலிருந்து தொடங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக தொலைவு செல்லும் திறன் கொண்டதால், வா்த்தகப் பயன்பாடுகளுக்கும் இந்தக் காரைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டாடா மோட்டாா்ஸின் மின்சார வாகன விற்பனைப் பிரிவுத் தலைவா் ஆஷிஷ் தா் கூறுகையில், ‘நீண்ட தொலைவு செல்லக்கூடிய மின்சாரக் காா்களுக்கான எங்களது வாடிக்கையாளா்களின் தேவையை புதிய டைகா் இ.வி. ரகம் நிறைவு செய்யும். அத்துடன், எங்களது வா்த்தக வாடிக்கையாளா்களின் வருவாயை அதிகரிக்கவும் இந்தக் காா் ரகம் உதவும்’ என்றாா்.

நாடு முழுவதும் 30 நகரங்களில் கிடைக்கும் இந்த நெடுந்தொலைவு டைகா் இ.வி., ஏற்கெனவே அறிமுகமப்படுத்தப்பட்டுள்ள டைகா் இ.வி. ரகத்தின் மேம்படுத்தப்பட்ட ரகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com