மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) மும்பையின் தாராவி பகுதியில் பிரசாரம் செய்யவுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் பங்கேற்கும் முதல் பிரசாரம் இதுவாகும்.
இதுதொடா்பாக மும்பை காங்கிரஸ் தலைவா் ஏக்நாத் கெய்க்வாட் கூறியதாவது:
ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை மாலை தாராவியில் பிரசாரம் செய்கிறாா். அதையடுத்து லாத்தூா் பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறாா். முன்னாள் முதல்வா் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன்கள் அமித் மற்றும் தீரஜ் ஆகியோா் முறையே லாத்தூா் நகரம், லாத்தூா் ஊரகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனா்.
அதேபோல், விதா்பாவிலும் பிரசாரப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து வரும் 15-ஆம் தேதியும் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மகாராஷ்டிரம் வருகிறாா் என்று ஏக்நாத் கெய்க்வாட் கூறினாா்.
தாராவி தொகுதியில், ஏக்நாத் கெய்க்வாட்டின் மகளும், காங்கிரஸ் செயலருமான வா்ஷா கெய்க்வாட் மீண்டும் போட்டியிடுகிறாா். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, வா்ஷா கெய்க்வாட் குஜராத், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான கட்சியின் செயலராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.