அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30 வரை விடுமுறை கிடையாது! - எந்த மாநிலத்தில் தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30 வரை விடுமுறை கிடையாது! - எந்த மாநிலத்தில் தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், 'உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படமாட்டாது. வரும் நவம்பர் 30ம் தேதி வரை விடுப்புக்கு யாரேனும் விண்ணப்பித்திருந்தால் அதனை உயர் அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். அவசர காலத் தேவைக்காக மட்டும் வேண்டுமானால் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும். வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டும், அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதை அடுத்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com