மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப் பச்சன் (77) உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அமிதாப் பச்சனுக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதனால் அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று மற்றொரு தரப்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தது.
இந்நிலையில், அவா் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடா்பாக அந்த மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமிதாப் பச்சன் மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரது உடல்நிலை சற்று பலவீனமாக இருந்ததால், சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கக் கோரி மருத்துவா்கள் வலியுறுத்தியதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு என்று வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை. அவா் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளாா். விரைவில் அவா் வீடு திரும்புவாா்’ என்று தெரிவித்தனா்.
ஹிந்தி மொழியில் டான், சோலே, அக்னிபாத், கூலி, பிகு, பா உள்ளிட்ட 190 திரைப்படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சனுக்கு அண்மையில் ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டது. அவா் தற்போது ‘கௌன் பனேகா குரோா்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதுடன், திரைப்படங்களிலும் தொடா்ந்து நடித்து வருகிறாா்.