பஞ்சாபில் பெண் ஒருவர் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனது மகளின் கணவரின் அண்ணனை திருமணம் செய்தவர் பாதுகாப்பு வேண்டிய நீதிமன்றம் சென்றுள்ள சம்பவம் பஞ்சாப்பில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலைநாடுகள் போன்று தற்போது இந்தியாவிலும் திருமணங்கள் சர்ச்சைக்குரிய கதைகளாகி வருவது வேதனை அளிக்கும் நிகழ்வாகி வருகின்றன. நமது தேதத்தின் பஞ்சாபில் 37 வயதுடைய பெண் ஒருவர், தனது மகளின் மைத்துனரை, அதாவது மருமகனின் மூத்த சகோதரரான 22 வயதான இளைஞரை திருமணம் செய்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது 18 வயது மகளுக்கு குர்தாஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இளம் புதுமண தம்பதிகள் வாழ்க்கையை தொடங்கிய நிலையில், அந்த குடும்பத்தில் மற்றொரு உறவு உருவாகியுள்ளது.
பெண்ணின் 37 வயதான தாயாரும், கணவரின் 22 வயதுடைய மூத்த சகோதரரும் பதான்கோட்டில் பணிபுரிந்து வந்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு பின்னர் இருவருக்கிடையே காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த புதன்கிழமை (அக்டோர் 2, 2019) மாலிக்பூரில், தன்னை விட 15 வயது இளையவரும், தனது மருமகனின் மூத்த சகோதரரும், தனது மகளின் மைத்துனரை மணந்தார்.
இருப்பினும், இருவர்களின் காதல் திருமணம் குறித்த செய்தியை அவரது மகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது. மேலும் தனது தாய் தனது மைத்துனருடன் அவர் வசித்த வீட்டிற்கே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 14 ஆம் தேதி (அக்.14, 2019) வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து இரு குடும்பத்தினரும் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புகள் தீவிரமானாலும், தம்பதினர் இணைந்து குடும்ப நடத்தவே விரும்பவம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முதல் கணவர் இருக்கும்போது 37 வயதான பெண் 15 வயது இளவரான தனது மகளின் மைத்துனரை திருமணம் செய்துள்ள சம்பவம் அந்த மாநில மக்களிடைய முகம் சுளிக்க வைத்துள்ளது.